Latest Results

ஜனாதிபதி தேர்தலில், பெருமளவான வடபகுதி வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் உள்ள பெருமளவான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கமுடியாமல் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜனாதிபதி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், ஜனநாயகத்திற்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படியே இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், எத்தனை பேர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதாகும் என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வடக்கில் உள்ள 10 லட்சம் வாக்காளர்களில் 50 வீதமானோர், தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் நெடுங்காலமாக இருந்த மக்களில் பலருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாமல் உள்ளன.

இலங்கையின் தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டைகள் முக்கியம் என்ற அடிப்படையில், அங்கும் ஆயிரக்கணக்கானோர் தமது வாக்குகளை செலுத்தமுடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள், தமது வாக்குகளை செலுத்துவதிலும் தடைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனமாக 1500 மில்லியன் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதம கணக்காளர், ஈ ஏ வீரசேன தெரிவித்துள்ளார்.

இது பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் செலவீனங்களை காட்டிலும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுத்தேர்தலைக் காட்டிலும் 300 மில்லியன் ரூபா குறைவாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாவதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

web countervisitors by country counter
fv