Latest Results

பொது வேட்பாளர் சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்கள் பொலிஸாரால் கைது


ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களை, கிளர்ச்சி ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டை பாதுகாக்கும் எஸ்.எப். நடவடிக்கை ஆரம்பம் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், அரசாங்கத்திற்கு எதிரான வகையில் நாளைய தினம் ஜே.வி.பி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

web countervisitors by country counter
fv